瑟一部登一 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்
வரகுங் கொள்ளும் வித்தி மங்கலமல்லாதன செய்தவன் மங்கல மாக நீராடுமங்கலமும்;
அழித்ததனான் மண்ணுமங்கலம்" உதாரணம் :
"கடுத்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்.'
(புறம்-கடு) என எயிலழித்தவாறு கூறி,
'வியாச் சிறப்பின் வேள்வி முற்றி ஆய கட்ட’’ (புறம்-கடு)
எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க. குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமையின் இதனின் வேறாயிற்று.
பரிசில் கடைஇய நிலையும்-பரிசிலரை நீக்குதலமையாது
நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித் தான் குறித்த பொருண் மையினைச் செலுத்திக் கடாவின நிலையும்;
கடைக் கூட்டு நிலையும்-வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலையும்:
இதுவும் இழிந்தோர் கூற்றாயிற்று, இருத்தலே அன்றிக் *-ாவுதலின். நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னுங் குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க.
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன் ஆறும் இருவகை விடையும்-அங்ஙனம் பரிசில் பெற்றபின்
1. வெள்ளை வரகு என்பது கவடி : பலகறை. கொள் என்பது குடைவேல் மரம்; கருவை ம:த்தின் ஒருவகை.
2. பரிசில் கடை இய கடைக்கூட்டு நிலை என் பதனைப் பரிசில் கடைஇய
திலை, கடைக்கூட்டுநிலை என இரண்டு துறைகளாகப் பகுத்துரைப்பர் நச்சி னார்க்கி ரிையர்.
3. இருத்தலே என்பதனை இரத்தலே' எனத்திருத்துக, - பரிசில் நிலையாவது, பரிசிலர் வள ல்களிடத்து தாம்பெற்ற பரிசிலின் தன்மையினை எடுத்துரைத்தல்.
4. நடை.வயிற்றோன்றலாவது, உலக நடையாகிய வழக்கின்கண் காணப் படுதல், - -