பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ఖీ தொல்காப்பியம் சிலையாரும், எல்லோர்க்கும் இன்பத் துன்பத்திற்குக் காரணமான இருவினையையும் வகுப்பது' எனச் சேவைரையரும் நச்சிஞர்க் கினியரும் பொருள் கூறியுள்ளார்கள். எனவே பால்வரை தெய்வம் என வழங்கும் இச்சொல், இறைவகிைய முழுமுதற் பொருளையே குறித்து நின்றமை உரையாசிரியரெல்லார்க்கும் உடன்படாதல் பெற்ரும். இதனையடுத்து வினையெனச் சுட்டப் பட்டது. ஊழ் என்பது எல்லா வுரையாசிரியர்க்கும் ஒத்த முடி பாதலால் முன்னுள்ள பால்வரை தெய்வம் என்னுஞ் சொல்லுக்கு ஊழ்வினையெனப் பொருள் கூறுதல் பொருந்தாதென்பது துணியப்படும். "ஒன்றே வேறே யென்றிரு பால்வாயின் ஒன்றி யுயர்ந்த பால தாணேயின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ ஞயினுங் கடிவரை யின்றே” எனவருங் களவியற் சூத்திரத்தில் பாலின் இயல்பினையும் அதன் வகையினையும் அதனைப் பற்றுக் கோடாகக்கொண்டு நிகழும் தெய்வத்தின் ஆணையினையும் தொல்காப்பியனர் விரித்துரைத் துள்ளார். ஒன்றுவிப்பதும் வேறுப்படுத்துவதும் எனப் பால் (ஊழ்) இருவகைப்படுமென்றும், அவற்றுள் ஒன்றுவித்தலால் உயர்ந்த பாலின்வழி நிகழும் இறைவனது ஆணையால் உருவுந் திருவு முதலிய நலங்களால் ஒத்த தலைவனுந் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்படுவரென்றும் மேற்காட்டிய களவியற் சூத்திரம் அறிவுறுத்துகின்றது. ஆசிரியர் கூறிய இருவகைப் பாலினுள் ஒன்றுவிக்கும் பாலினே ஆகூழ் என்றும் வேறுபடுத்தும் பாலினைப் போகூழ் என்றும் ஊழென்னும் அதிகாரத்துள் திருவள்ளுவர் குறிப்பிட்டு விளக்கியுள்ளார், இக்குறிப்பினை ஒப்பிட்டு நோக்குங் கால் இச்சூத்திரத்தில் ஒன்றே வேறே யென்றிருபால்' என்றது இருவகை யூழினையேயென்பது இனிது விளங்கும். எனவே பால் வரை தெய்வம் என்ற தொடர்க்கு எல்லார்க்கும் இன்பத்