பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லதிகாரம் 33 கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும், என இவையுங்கூட்டி எட்டிறந்த பலவகையான் ஆராய்ந்துணர்த்தின ரென்பர் நச்சினர்க்கினியர். சொல் தனிமொழி, தொடர்மொழி என இரு வகைப்படும். மொழிகள் யாங்கனுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக்கூறிய படைப்புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்துநிற்றலுண்டு. அதனல் தனிமொழியென்ற பிரிவும் கொள்ளப்படுவதாயிற்று. தனிமொழி பொருண்மை மாத்திரம் உணர்த்துவதல்லது கேட்டார்க்கு ஒரு பயன்பட நிற்பதன்ரும். கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர்மொழிகளேயாம். ஆகவே தொடர்மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவியாகிய தனிமொழி யிலக்கணத்தினைப் பின்னுணர்த்துதலே முறையாகும். இம் முறையினை யுளத்துட்கொண்டு இப்படலத்துள் அல்வழி வேற்று மையாகிய தொடர்மொழிகளின் இலக்கணத்தை முன்னுணர்த்தி அத்தொடர்மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய தனிமொழிகளின் இலக்கணங்களைப் பின்னர் உணர்த்துவர் ஆசிரியர். சொற்கள் ஒன்ருேடொன்று தொடருங்கால் பயனிலை வகையானும், தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகை யானும் தொடருமென்பது தமிழிலக்கண மரபாகும். சாத்தன் வந்தான் என்ருற்போல எழுவாயும் பயனிலையுமாகத் தொடர்ந்து நிற்பது பயனிலை வகை யெனப்படும். வேற்றுமை யுருபும் உவம வுருபும் எண்ணும்மையாகிய இடைச்சொல்லும் வினைச்சொல்லீறும் பண்புணர்த்தும் ஈறும் இவையல்லாத பிறிதோர் சொல்லும் மறைந்து நிற்கத்தொடரும் சொல்லினது தொடர்ச்சி தொகை நிலைவகை,யெனப்படும். பொருள்களை ஒன்ருேடொன்று சேர்த்து