பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 191 ஆனால் எந்த ஆடவனும் தன் மனைவியை அன்றிப் பிற பெண்ணை நாடாது இருக்கின்றானா? கடற்கரை யிலும், நாடக மன்றங்களிலும், பிற இடங்களிலும் வேறு பெண்ணின் தொடர்பைப் பெற்று மகிழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை தோற்றுவிட்டது. ஆகவே ஆடவர் ஒரே பெண்ணோடு அமைவது என்பது மிக மிக அரிது. பண்டைத் தமிழகத்தில் பரத்தையர் இருந்தனர் என்று எண்ணி நாணமுறு தல் வேண்டாம். வேறு நாட்டில் உள்ளதுபோல் அரசு வருவாய்க்குரியதாகப் பரத்தைமை கொள்ளப் படவில்லை. அரசுரிமை அளித்து வரிப்பெற்று பரத் தையரைத் தொழில் புரியுமாறு நம் முன்னோர் செய்து கொள்ளவில்லை. இப்பரத்தைமையும் இலக்கியங் களில் மருதத் திணையில் ஊடற் பொருளை மிகுத்துக் காட்டக் கொள்ளப்பட்டதேயன்றி வாழ்வில் உண்மை யாகக் கொண்டோர் அரசரும், வீரரும் பெருஞ் செல்வருமே. இப்பரத்தைமை காரணமாகத் தலைவன் பிரிந் தால் வீட்டிற்கு வந்துவிட வேண்டிய காலம் சுட்டி யுணர்த்தப்படுகின்றது. அக்காலம் மக்கள் தொகை பெருக வேண்டுமென்று எண்ணிய காலம். இக்காலம் போல் குழந்தைகளைப் பெறாதே என்று கூறினார் இலர். குழந்தைகளைப் பெறுக' என வாழ்த்தினர். குழந்தைகளைப் பெற வேண்டுமென்றால் கருத்தரிக் கும் காலத்தில் மனைவியுடன் உறைதல் வேண்டும். கருத்தரிக்கும் காலம் பூப்புத் தோன்றி மறைந்த நாள் முதல் பன்னிரண்டு நாட்களே. இன்றைய ஆராய்ச்சியாலும் இது உறுதிப்படுத்தப்படுகின்றது. பூப்பு வெளிப்பட்ட பத்தாம் நாளிலிருந்து பதினைந் தாம் நாள் வரையில்தான் கருத்தோன்றும் என்பர்