பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 பொருளதிகாரம் தெரிகின்றமையின் நச்சினார்க்கினியரும் துடிநிலை எனவே பாடங் கொண்டார்." (பதிப்பு 51 பக். 48) "இனி, துடிநிலை என்னுமிடத்துக் குடிநிலை என இளம்பூரணர் கொண்ட பாடத்தின் பொருத்தம் புலப்படவில்லை. ஆகோள் கொற்றவை நிலைகளைப் போலக் குடிநிலை போர்த் தொடக்கத்திற்கு இன்றியமையாததன்று. இவ்வியலின்பின் 'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் துறைகளெனக் கூறப்படுவன மூன்று. அவற்றுள் முதலது கொடிநிலை (புறத்திணை சூ.33) அஃதொழிந்த மற்றிரண்டும் புறத்தினைத் துறைகளாக முன் வேறு சூத்திரங்களில் விளக்கப் பெற்றுள்ளன. அவற்றோடு அவ்வாறு புறத்தினை எதற்கும் துறையாக யாண்டும் விளக்கவோ சுட்டவோ பெறாத கொடிநிலையை Els ITFITIT கூட்டி ஒரு பரிசாயெண்ணுதல் அமைவுடைத்தன்று. புறத்துறைகளாக வேறு சூத்திரங்களில் விளக்கப்படும் இரண்டனொடு பின் சூத்திரத்தில் கொடிநிலை வாளா கூட்டிக் கூறப் பெறுதலால் அவையொப்பக் கொடிநிலையும் புறத்துணையாம் பரிசு பிறிதிடத்தில் சுட்டப்பெறுதல் முறையாகும். அதனாலும், கொடியெடுப்பு போர்த் துவக்கத்தில் நிகழ்வதொன்றாதலானும் கொடிநிலையைக் கொற்றவை நிலையொடு வெட்சி வகையாய் இதில் தொல்காப்பியர் கூறினார் எனக் கொள்ளுதலே சிறக்கும். அக் கொடிநிலைப்பாடம் நாளடைவில் ஏடெழுதுவோரால் குடிநிலையாக மாறி இளம்பூரணர் கண்டிருத்தல் வேண்டும். அப்பாடம் சிறவாமையால் அதனைப் பொருள் பொருந்தப் போர்க்குரிய துடிநிலையாக்கி நச்சினார்க்கினியர் பாடங்கொண்டதாகக் கருதற்கு இடனுள்ளது. அன்றியும் துடி துறை சுட்டும் பாலைநிலப் பறையேயாதலானும் எல்லா நிலத்துக்கும் பொதுவான போர்ப் பெருமுரசுக்குப் பெயரன்றாமாதலானும், இங்குத் துடிநிலைப் பாடத்தினும் கொடிநிலைப் பாடமே சிறப்புடைத்தாதல் மலையிலக்காம். ஆகவே இளம்பூரணரின் குடிநிலை, நச்சினார்க்கினியரின் துடிநிலை எனுமிரு பாடங்களையும் கொள்ளாது இதில் கொடிநிலையே பாடமாகக் கொள்ளின் பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் எனத்தொகுத்து மூன்றனுள் மற்றவற்றோடு கொடிநிலையைக் கூட்டிக் கூறிய பெற்றி இனிது விளங்கும்". சோம. (பதிப்பு 51 பக், 44, 47) "புறப்பொருள் வெண்பாமாலை வெட்சித்தினைத் துறைகள் தொல்காப்பியனார் குறித்த வெட்சித்தினைத் துறைகளை அடியொற்றியே அமைந்துள்ளன. வெண்பாமாலையிலுள்ள வெட்சித் துறைகளுள் தொடுகழல் மறவர் தொல்குடி மரபிற் படுகண் இமிழ்துடிப் பண்புரைத் தன்று எனத் துடிநிலையும், ஒளியின் நீங்கா விறற்படையோள் அளியின் நீங்கா அருளுரைத்தன்று எனக் கொற்றவை நிலையும் அடுத்தடுத்துக் கூறப்படுதலின் இத்தொல்காப்பிய நூற்பாவுக்கு மறங்கடைக் கூட்டிய துடிநிலை என்றபாடமே ஐயனாரிதனார் கொண்ட பாடம் எனக் கருத வேண்டியுள்ளது. இக்கருத்தினாலேயே மறங்கடைக் கூட்டிய துடிநிலை எனப்பாடங்கொண்டார் நச்சினார்க்கினியர். புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைப் படலத்தில். மண்டினி ஞாலத்துத் தொன்மையுமற்றும் கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று எனக் குடிநிலை என்ற துறை இடம் பெற்றிருத்தல் கொண்டு இத்தொல்காப்பிய நூற்பாவுக்கு மறங்கடைக்கூட்டிய குடிநிலை என்ற பாடமும் வழங்கி வந்தமை புலப்படுதலால் அதனையே இளம்பூரணர் பாடமாகக் கொண்டு உரைவரைந்துள்ளார் எனத்தெரிகிறது. இவ்வாறு இந் நூற்பாவுக்கு மறங்கடைக் கூட்டிய குடிநிலை என இளம்பூரணரும், மறங்கடைக் கூட்டிய துடிநிலை என நச்சினார்க்கினியரும் இருவேறு பாடங்களைக் கொண்டு உரை வரைவதற்கு