பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HE O ஒதும்உரை இவர்அளவோ நமக்கும்மிகு புகழுறுத்தும் உரைஆ யிற்றால் ஈதுமறா(து) இயற்றுதலே நம்தகுதிக்(கு) இயற்கைஎன இயைய எண்ணிக் கோதுதவிர் தரமிக்க அன்பொடுநன்(கு) ஆராய்ந்து கொடுத்தா னாக அன்னதைஏற்(று) உருள்.அச்சிற் பதிப்பித்தோன் யார்என்னில் அறையக் கேண்மோ தன்.அனைய ராகிர வலர்தம்மை ஆக்குவிக்கும் தகைமை யாளன் பான்.அனைய குணசாலி புரவலர்தம் காரியத்தில் புந்தி உள்ளோன் ெ கல்நவிலும் சிலைப்பெருமான் கழல்துணையே துணையாகக் கருதும் மேலோன். பூதஉடம்பு இறும்இறுத லுறாது புகழ் உடம்(பு) என்று புலவோர் கூற ஏதமறத் தெளித்தாங்குப் பழையனூர் நீலியினால் இறந்த நாய்கற்(கு) ஒதுமொழி பிழையாமல் உடல்விடுத்துப் புகழ்அடைந்தோர் உதிக்கப் பெற்ற சாதம்மலி தருதொண்டை மண்டலவே - ளாளர்குலம் தழைவுற் றோங்க. ஒங்குறுமீ துார்க்கோட்டத்(து) உயர்சுப்ப - ராயமுகில் உவந்து செய்த தேங்குதவப் பயனாகி அவதரித்துக் கல்விநிறை செல்வம் பெற்று வாங்குதிரைக் கடற்புவிக்(கு)ஓர் இந்திரனாச் சிறப்புற்று வயங்கு மேலோன் வீங்குபுகழ் கலன்ஆகப் புனைந்து(உ)லவு கன்னியப்ப விபுலன் அன்றே.