பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 எழுத்ததிகாரம் 52. னகாரை முன்னர் மகாரங் குறுகும். 19 பா.வே. இந் நூற்பாவுக்குமுன் சுவடி 1052 இல் அவற்றுள் என ஒரு சொற்சீரடி உள்ளது. 1. ணகார - சுவடிகள் 10:44, 1052 பதிப்பு 19 பதிப்புகள் 38, 51, 53, .இல் சு.வே. 53. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்திய றிரியா வென்மனார் புலவர். 20 54. அகர இகர மைகார மாகும். பா.வே. 1. அகர இகரம் எகர மாகும் - பதிப்பு 29 இல் சு. ബേ." 55. அகர உகர மெளகார மாகும். 22 பா.வே. 1. அகர உகரம் ஒகர மாகும் - பதிப்பு 29 இல் சு.வே." இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், "செய்யுள் இறுதிக்கண் போலும் என்னும் மொழிக்கண்' என்றும். நச்சர் செய்யுட்கண் போலும் என்னும் சொல்லின் இறுதிக்கண் என்றும் உரை கூறுகின்றனர். இவற்றால் அவர்கள் கொண்ட பாடம் போலும் என்பதே எனத் தெளிவாகிறது. வேங்கட. இச் சொல் செய்யுளிறுதியில் மட்டுமன்றி இடையிலும் வரும் என நிறுவுகின்றார். (பதிப்பு 29) ஆ.சி. "போலும் என்பது போன்ம் எனத்திரிந்த நிலையில் செய்யுள் இறுதியிலேயன்றி யிடையிலும் வருதலைக் கானுமிடத்துத் தொல்காப்பியர்க்குப் பின்னர் அச்சொல் இடையிலும் இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கலாம்" என்பதோடு, பரிபாடலில் (10 97 - 98) அடுக்கி வந்ததையும் காட்டுகிறார். (பதிப்பு 53 பக். 100) யாரும் எங்கும் போலி என்பதைப்பற்றிப் பேசவில்லை. வேறு டோலி வடிவங்களையும் எடுத்துக் காட்டவில்லை. எனவே இந்நூற்பாவின் மூலபாடம் போலும் மொழிவயின் என்பதே பொருத்தமாகும். ப.வெ.நா. டி கூட்டெழுத்துக்கள் அல்லது போலி எழுத்துக்கள் என எம்முறையில் கொண்டாலும் ஐகாரமாகும். ஒளகாரமாகும் என வருவனவே பொருந்திய பாடங்கள். வெ.ப, பக். 1 04