பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வேண்ட: வேண்டிய தில்லை என்னும் பொருளில் வேண்டாம்' என்னும் சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால் தமிழில் எழுத்து வழக்கில் வேண்டா' என்றே சொல்ல வேண்டும்; இறுதியில் 'ம்' கூடாது. மலையாளத்தில் வேண்டா என்பது வேண்ட' என வழங்கப்படுகிறது; இங்கும் இறுதியில் 'ம்' இல்லை. ஆனால், இறுதியில் 'ஆ' என்பது 'அ' என ஆகியுள்ளது. இந்தச் சிறு மாறுதலைத் தவிர, வேண்ட' என்னும் மலையாளம் வேண்டா' என் னும் தமிழோடு ஒத்திருப்பதைக் காணலாம். சிரட்டை: மலையாளத்தில், கொட்டாங்கச்சியை - அதாவது - தேங்காய் ஒட்டைக் குறிக்கச் சிறட்ட' என்னும் சொல் வழங்கப்படுகிறது. இந்தச்சொல் தமிழிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இது தொடர்பான என் பட்டறிவு ஒன்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன், நான் காவிரிக் கரையில் உள்ள திருவையாற்று அரசர் கல் லூரியில் வித்துவான் பட்டத்திற்குப் படித்துக்கொண் டிருந்தபோது - 1938ஆம் ஆண்டில் - எனது பதினாறாம் அகவையில் - நிகழ்ந்த ஒரு செய்தி வருமாறு: காலம் கோடை - காவிரியில் சிறிதும் நீரோட்டம் இல்லை. மணல் பரந்து கிடந்தது. ஒருநாள் மாலைநெல்லை மாவட் டத்தைச் சேர்ந்த சாமி என்பவரும் முத்தணைந்த பெரு மாள் என்பவரும் யானும் ஆற்று மணலில் அமர்ந்து உரை யாடிக் கொண்டிருந்தோம். பதினாறு அகவையே உடைய எனது கை வாளா இருக்க முடியுமா? கையால் மணலை முழங்கை ஆழத்திற்குத் தோண்டிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஒரளவு ஆழம் உண்டானதும் கையில் கெட்டிப் பொருள் ஒன்று தட்டுப்பட்டது. அதைத் தோண்டி வெளியே