புலவர் என்.வி. கலைமணி
73
சென்று, தன்னைப் பற்றிய விவரங்களை நேரிடையாகவே விளக்கிக் கூறி, பேட்டி ஒன்று கொடுக்கும்படி ஹிட்லரிடம் கேட்டார்.
ஹிட்லர், நாயுடு அவர்களின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு அன்போடு உரையாடி - பேட்டியும் கொடுத்தார். திரு. நாயுடு பேசுவதை 'லே' என்பவர் ஹிட்லருக்கு மொழி பெயர்த்துக் கூறினார். இறுதியாக ஹிட்லரோடும், அவருடைய எல்லா நண்பர்களோடும் ஜி.டி. நாயுடு புகைப் படம் எடுத்துக் கொண்டு, ஹிட்லருடைய தனி உருவப் படத்தில் நாயுடு அவருடைய கையெழுத்தையும் பெற்றார்!
'டசல் டார்ஃப்' என்ற இடத்தில் நாயுடு அவர்கள் தங்கியிருந்தார். அப்போது செர்மன் படைப் பிரிவு ஒன்று அவ் வழியே சென்று கொண்டிருந்தது. திரு. நாயுடு அந்த நாசிப் படைகளைப் புகைப்படம் எடுத்தார். பெர்லின் நகரில் தங்கியிருந்தபோது செர்மன் அரசியலையும் தெரிந்து கொண்டார்.
டால் டாப் என்ற இடத்திலே இருந்த ஜி.டி. நாயுடு அவர்கள் மீண்டும் பெர்லின் நகரம் வந்தார். அங்கிருந்து, இயற்கை அழகு தவழும் சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்றார்.
கவிஸ் நாட்டில் :
நேரு - கமலா சந்திப்பு!
சுவிட்சர்லாந்து கடிகாரத் தொழிலுக்குப் புகழ் பெற்ற நகரம். அங்கே தங்கியிருந்தபோது, கடிகாரம் செய்வதற்கான துணுக்கங் களையும் நாயுடு தெளிவாகத் தெரிந்து கொண்டார். அங்கிருந்து கோடை கால சொகுசு உறைவிடமான பேடன்வீலர் என்ற நகருக்கு வந்து தங்கினார்.
பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், தனது மனைவி கமலாவின் உடல் நலம் கவலைக்கிடமாக இருந்ததால், சிகிச்சை பெற்றிட, அப்போது பேடன் வீலர் நகருக்கு வந்திருந்தார்.
இதை அறிந்த ஜி.டி. நாயுடு அவர்கள், நேரு இருப்பிடத்தை அறிந்து கொண்டு அவரைச் சந்தித்தார். கமலா நேரு விடமும் நாயுடு உடல் நலம் விசாரித்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார்கள்.