பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணற்காளே " என்று இவ்வம்மையாரே சிறப் பித்திருக்கின்றனர். இத்தொடரின் பொருள், ' வீரத்தண்டை அணிந்த கரிய தாடியையுடைய காளே போன்ற வீரன்’ என்பது.

நக்கண்ணேயார் புலவரும் ஆவார். இவ்வம்மை யாரின் புலமை இச்சோழனைக் காதலித்துப் பாடிய மூன்று பாடல்களால் அறிய வருகின்றது. இப்பாடல்கள் வழியே நக்கண்ணேயார் கோப் பெருநற்கிள்ளியைக் காதலித்தனர் என்பது தெரி கிறது. இவ்வம்மையார் இவன் மல்லைெடு பொருத போது, மறைந்து நின்று அக்காட்சி யினைக் கண்டு களித்தனர். அவன் மாட்டுக் கொண்ட காதலே காரணமாகத் தம் உடம்பு பொன்னிறம்போலத் தேமல் பரவும் நிலையினை யும் உற்றனர். இதனே இவ்வம்மையாரே, 'யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம் மே, ’ என்று பாடியிருப்பதால் அறிகிருேம். தேமல் நிறம் பொன்னிறம் ஆலிதன் 'பொன் அன்னம்மே எனப்பட்டது. இவ்வம்மையார் தம் மேனி தேமல் படரும் நிலையில்மட்டும் அன், றிக் காதலால் மெலிந்து, வளேகள் கழலும் கிலே யினையும் உற்றனர். தாம் காதலித்த சோழனைப் போர்க்களத்திலே சென்று தழுவலாம் என்றும் எண்ணினர்; ஆனால், அது செய்தற்கு அஞ்சினர். அவ்வச்சம் அங்கிருந்த அவையினர் என்ன வென்று கூறுவரோ என்பதல்ை எழுந்த அச்ச மாகும். இதனையும் இவ்வம்மையார், "அடு தோள் முயங்கல் அவை நானுவலே ' என்று தம்