பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L i i I

இதற்குப் போதிய சான்ருகும். இதன் கருத்து, சூரியன் எப்படித் தனது கடுமை இயல்பாகிய வெம்மையில்ை பொருள்களைச் சுட்டு அழிக்கின் றனனே, அது போல அப்பாண்டியன் பகைவர் களேத் தன் சினமாகிய வெம்மையினுல் சுட் டழிப்பவன், என்பதாம். இத்தகைய வீரமும் சினமும் அவன் கொண்டிருந்த தல்ை, அவன் ஈர நெஞ்சம் இல்லாதவனுய் இருந்திருப்பானே என்று எண்ண வேண்டா. வீரமுள்ள இடத்தில் நிச்சயமாக ஈரம் இருந்தே தீரும். ஈரமாவது அன்பு. இந்த அன்பு அப்பாண்டியனிடம் குடி கொண்டிருந்தது. இதனேக்குறிப்பிடாமலும் விட் டிலர் புலவர் சீத்தலைச் சாத்தனர். அச்செழியன் பால் அமைந்த அன்பு சாத்தரிைடத்தில் மட்டும் காட்டப்பட்ட அன்பு போலும் என்று நாம் நினைத்தல் கூடாது. அத்தென்னவன் கொண்ட அன்பு சீத்தலைச் சாத்தனர் போன்ற புலவர் யாவரிடத்தும் காட்டப்பட்டு வந்த அன்பாகும். அப்பாண்டியன் காட்டிய அன்பு தண்ணிய அன்பு : இன்பம் தரும் அன்பு. இக்கருத்து இப் புலவர் கூறும் உவமை வாயிலாக உணரக் கிடக் கிறது. குளிர்மைக்கு ஏற்றவனை சந்திரனேயே அப்பாண்டிய மன்னன் அன்புப் பண்புக்கு அமைந்த உவமையாக அறிஞர் சீத்தலேச் சாத்த ர்ை அறைந்துள்ளார். இவ்வாறு பகைவர்க்கு ஞாயிறு அனேயனுகவும், புலவர்கட்குத் திங்கள் போன்றவனாகவும் இருந்தான் என்பதை, இப் புலவர் புலப்படுத்தும் புறநானூற்று அடிகள்.