[45]
வானம்பாடி நீர்த்துளியை நச்சி வாழ்வது போலத் தாம் இப்பாண்டியன் பொருளே நச்சி வாழ விரும்பியதாக அன்ருே கூறுகிருர் ?
" துளிகசைப் புள்ளின் அளிகசைக்கு இரங்கி ”
என்ற அடியினைக் காண்க.
இப்புலவர் இந்நன்மாறனிடத்தில் பெருமதிப்
புக்கொண்டிருந்தார் ; இவனேத் தம் கனவிலும் மறவாது பாராட்டியுள்ளார். இதனை இவரே,
" திண்தேர் அண்ணல் கின்யா ராட்டிக்
காதல் பெருமையில் கனவிலும் அரற்றும்எம் காமர் நெஞ்சம்.” என்று குறிப்பிடுகிரு.ர்.
இம்மன்னன் பெருஞ்செல்வனுய் விளங்கினன் போலும் : இவனது செல்வப் பெருக்கத்தினைப் புலவர் திருமாலுக்குள்ள செல்வம் என்று சிறப் பித்துள்ளார், “ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் என்பது இப்புலவரது அன்பு மொழி. நன்மாறனுடைய முன்னேரும் நல்ல வல்லமை படைத்தவர். அவர்கள் பகைவர்களே வென்று பொருள்களேக் கொணர்ந்து தங்கள் நாட்டில் குவித்தவர்கள். அந்த வீரம் வாய்ந்த முன்னேர் மேம்பாடு,
' ஒன்னர் வாட அருங்கலம் தந்துதும்
பொன்னுடை நெடுநகர் கிறைய வைத்தகின் முன்னேர்.”
என்னும் அடிகளால் பெறப்படுகிறது. இந்த