பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணத்தால் இடத்தின் அடியாகப் பிறந்த பெய ராகிய ஆலியார் என்னும் பெயரால் வழங்கப் பட்டனர். இவர் வீரர் குடியில் பிறந்து அரசர் களின் சேனேயில் சேர்ந்து, போர்த் தொழிலைப் புரிந்து வந்தவராகச் சிறப்புடன் கருதப்படுகிரு.ர். வயிறு வளர்த்தற்கு ஏதேனும் ஒரு தொழில் வேண்டும் அல்லவா? ஆல்ை, இவர் வீரர் குடி யில் தோன்றியவராக இருக்கவேண்டும் என்ப தும், போர்த் தொழிலே மேற்கொண்டவராக இருக்க வேண்டும் என்பதும் இவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் கொண்டு நாம் யூகித்து அறியக்கூடிய செய்திகளாகும். அப்புறநானூற் றுப் பாடலால் இவர் தொழிலே மட்டும் நாம் அறிந்துகொள்ளுதலன்றிப் புலவராக வும் இருந்து செய்யுள் இயற்றும் சிறப்பும் பெற்ருர் என்பதையும் உணர்ந்துகொள்கிருேம்.

ஆலியார் திருப்பெயர் முன் எந்த விதமான அடைமொழிகளும் அமைந்தில. முன்னர் எடுத் துக் கூறப்பட்ட புலவர்கட்கெல்லாம் முன்னும் பின்னும் அடைமொழிகள் அமைந்து, அவர்கள் தொழிலையும் ஊரையும் உணர்த்தி நிற்கின்றன. இங்கு எடுத்துக் கூறப்படும் புலவர் திருப்பெயர், இப்புலவரது இடத்தை அறிதற்குத் துணை செய் கின்றதே அன்றி, இவர் மேற்கொண்ட தொழிலே உணர்த்தி நிற்கவில்லே. என்ருலும், இவரது வாக்காகிய பாடல் மூலமே இவரது தொழில் போர் முனை கண்ட போர்த் தொழிலாகும் என் பதை அறிந்துகொள்ள நேரிடுகிறது. இக்கார