இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. பத்தாண்டுச் சாதனைகள்
பெருந்தொழில்கள்
இன்றைய நிலையில், நம் நாட்டின் பெரும் பகுதி மக்கள், விவசாயத்தையே நம்பி வாழக்கூடிய நிலையில் இருக்கின்றனர். பொதுவாக, தேசிய வருமானம் வளர்ச்சி அடைந்து வருகின்றது என்றாலும் 75 சதவிகித மக்கள் விவசாயத்திலேயே ஈடுபட்டிருக்கக் கூடிய காரணத்தினாலும் மக்களுடைய எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகின்ற காரணத்தினாலும் தனி மனிதனின் வருமானம் வர வரக் குறையக்கூடிய நிலைமை ஏற்பட்டு வருகின்றது. பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் ஒரு சிறு பகுதியினரே விவசாயத் துறையில் ஈடுபட்டிருக்கின்றனர். மற்றப் பெரும் பகுதியினர் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். அந்நிலையை நம் நாட்டிலும் ஏற்படுத்துவதன் மூல-
- 25-2-61ல் நிதி அமைச்சர் ஆற்றிய சட்டமன்ற உரையின் சில பகுதிகள் அப்படியே தரப்பெற்றுள்ளன.