பக்கம்:தொழில் வளம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

தொழில் வளம்


எதனால்? எத்தனையோ.திட்டங்கள். கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் இந்த மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் செயல்படுத்தப்பெறுகின்றன. எனினும் வாழ்வின் தேவைப் பொருள்கள் அருகி வருவதோடு விலையேற்றமும் பிணைந்து மேலோங்கிச் செல்வதையும் காண்கின்றாேம்; காரணம் என்ன? முன்னை நாளைவிட இன்று விளைவயல். பரப்பு பெருகியுள்ளது; ஆலை எண்ணிக்கை வளர்ந்துள்ளது; மக்கள். வாழிடங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன; பிறவும் இப்படியே. இருந்து எல்லாவற்றிற்கும். மக்கள் ‘; எங்கே? எங்கே ? எங்கே? ‘. என்று ஏங்க வேண்டிய காரணம் என்ன? திட்டத்துக்கெனக் கோடி கோடியாக அரசாங்கம் செலவிடும் பணம் எங்கே செல்லுகிறது? சில அரசியல் தலைவர்கள் சொல்லுவது போன்று-சுட்டிக் காட்டுவது போன்று-அத்தனை பொருளும்-திட்டங்களுக்கு ஒதுக்கும் செல்வம் அனைத்தும் - சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை என்பது உண்மையன்றாே ! - .

இதற்குக் காரணம் என்ன ? பலர் பல வகையாகக் கூறலாம். நான் கூற நினைப்பது பாரதியார் காட்டிய ' பிதற்றுவார் கேட்டிலார்’ என்பதே. ஆம்! இன்று பொருளாதாரம் பற்றி விண்முட்டப் பேசுவார் மக்களிடம் சென்று அவர்தம் குறைகளைக் கேட்டு, அக் குறைகளைப் போக்க முன்வர வேண்டும். நகரங்களிலிருந்து-உயர்ந்த மாளிகைகளில் இருந்து கொண்டு தம்கீழ் உள்ளவரை வருத்தி வேலையிட்டு-அவர்கள் அவர்,,.கீழ் உள்ளவர்களுக்கு ஆணையிட்டு-அக் கீழ் உள்ள எத்தனையோ சூழல்களுக்கு உட்பட்டுத் தரும் கணக்கைக் கொண்டுதானே இன்றைய பொருளாதாரத் தலைவர்கள் புள்ளி விவரத்தை மக்கள் முன் வைக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/325&oldid=1382198" இலிருந்து மீள்விக்கப்பட்டது