பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூரத்தில் வாழ்ந்தாலும், சமுதாயக் கலப்பில் கலந்துகொள் வதற்காக ஊருக்குள் வருவார். தம்முடைய தொழுவத்தி லிருந்து, ஒரு வண்டி எருவை எடுப்பதற்கு எவ்வளவு தயாராக இருப்பாரோ, அதேபோல, கோயிலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் நீதியை எடுத்துக் கொள்ளத் தயாராக இருப்பார். அந்தப் பழைய காலங்களில், மக்கள் நெருப்பின் பக்கத்தில் அமர்ந்து குளிரைப் போக்கிக் கொண்டு, நல்ல அறிவுதரும் விவாதங்களில் ஈடுபட்ட நாட்களைப் பற்றிப் பேசிக் கொள்ளுவோம். ... என எழுதியுள்ளார். 8 113