பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112வல்லிக்கண்ணன்

 கவிக்கும் பொன்னுக்கும் ஒத்துவராது ராஜா, பொழுதை பூவாக, நிலவாக, அமுதமாக, இனிமையாய். சுவையாய், சொர்க்கமாய், ரசமானதாக, ரம்மியமானதாக மாற்றுவோம்,” என அடுக்கினாள் அலங்காரி.

முடிவிலே பேச்சு அவர்களின் தீராப் பிரச்னையைத் தொட்டது.

தேவகி, நீ ஏன் சும்மா கல்யாணம் கல்யாணம் என்று தொண தொணக்கிறே? நான் உன்னை விட்டுப் போய் விடுவேன் என்ற பயமா? என்று ராஜா தமாசாகக் கேட்டான்.

நீ பயப்படாமல் இருந்தால் சரிதான்!” என்று கோணல் பார்வை பார்த்து குறும்பாக பேசினாள் தேவகி,

அவன் தன் எண்ணத்தை மறைத்து வாய் நிறைந்த சிரிப்பைக் காட்டினான். பிறகு சொன்னான்: இன்னும் சிறிது காலம்தான். அதுக்கு பிறகு ஐயாவை பாரேன், கவி ஏ. ராஜா மகாகவி ஏ. ராஜாவாக உயர்ந்திருப்பார். எனது 'மின்னல் மகள்' காவியம் எங்கும் சிறப்புற்று விளங்கும். அப்புறம் சான்சுகள் என்னை தேடி வரும், அது நாடகமாக அரங்கேறப் போகிறது. உடனடியாக படம் ஆகும். பிறகு படத்துக்கு மேல் படங்கள்- ஏகப் பட்ட சான்சுகள்! பாடல்கள்! மகாகவி ஏ. ராஜா... கதை, வசனம், பாடல். மகாகவி ஏ. ராஜா! ஆகா! ஆகா.... புகழ்! பணம்! அந்தஸ்து! உயர்! ஆகா, அடி ராணி, என் ராணிக் கண்ணு! தேவகிக் குட்டி...”

"மகாகவி'யின் கற்பனைக்கும் கைகளுக்குமிடையே கிடந்து. குரங்கு கைப் பூமாலை போல் திணறினாள் தேவகி. அவளுக்கு 'ஆனந்த மென் சொல்வேனே!" என்ற உள்ளக் குதூகலம்தான் ஏற்பட்டிருக்கும்.