பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்137


நன்றாகக் கழுவமாட்டாள். தினசரி குளிக்க வேண்டியிருக்குதே என்று ரொம்பவும் சங்கடப்படுவாள்.

அவளுடைய 'அசுத்த மோகம்' வீட்டம்மாளுக்குப் பிடிக்கவில்லை. சீக்கிரமே போ அம்மா!' என்று வழி அனுப்பி வைத்தாள்.

ராசம்மாளுக்குப் பிறகு வந்த சுந்தரம் சுத்த மோகியும் ‘சிங்காரப் பிரியையுமாக இருந்த காரணத்தினால் வெளியேற்றப்பட்டாள்! அவளுக்கு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். ஒல்லியாய், கரிக்கட்டயாய், கன்னம் ஒட்டிப் போய்த்தான் இருந்தாள். அவள் மனசில் 'நாம ரொம்ப அழகு' என்ற எண்ணம் இருந்திருக்கும். அடிக்கடி கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொள்வது அவளது பொழுது போக்குகளில் ஒன்று அதே மாதிரி தினசரி மூன்று நான்கு தடவைகள் முகம் கழுவி, பவுடரை தாராளமாகப் பூசி, பொட்டிட்டு, தலையைச் சீவிக் கொள்வதிலும் சிரத்தை காட்டுவாள். காலையில் அடுப்புச் சோலி முடிந்ததும், இப்படிச் சிங்காரித்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போவாள். மத்தியானச் சமையல் ஆனதும், முகம் கழுவிப் புவுடர் தடவிக் கொள்வாள். அதே மாதிரி சாயங்காலமும் காலையிலும் மாலையிலும் குளிப்பாள். வாசனை சோப்பு இல்லாமல் குளிக்க மாட்டாள்.

சிவராமனின் புத்தக அலமாரியை, மேஜையை எல்லாம் கண்ணோட்டம் விட்டாள் சுந்தரம். ‘’என்ன புத்தகம் இதெல்லாம்! மர்மக்கதை, துப்பறியும் நாவல், அது மாதிரி எதுவுமே இல்லையே? சினிமாப் பத்திரிகை ஒன்றுகூட வாங்குவதில்லையா?‘’ அழகு.அழகாப்படங்கள் போட்ட பத்திரிகைகள் எத்தனையோ வருதே நீங்க எதுவுமே வாங்துறதில்லையா?” என்று விசாரித்தாள்.

'இந்த மேனாமினுக்கி நம்ம வீட்டுக்கு வேண்டாம்” என்று சிவராமனும் அவர் மனைவியும் ஏகமனதாகத்