பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அனுபவம் புதுமை!



சிவகுரு-அவரது முழுப்பெயர் சிவகுருநாதன். துணிந்து கிளம்பி விட்டார். எத்தனை நாள்தான் வெறும் நினைப்பிலேயே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பது? மனம் கட்டுகிற கனவுகளையும், வளர்க்கிற ஆசைகளையும் ஒவ்வொன்றாக செயல்படுத்திப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்தார்.

மற்றவர்கள் கேள்விப்பட்டால், விசித்திரமான நினைப்புகள் என்றுதான் சொல்வார்கள். பைத்தியக்காரத்தனமான ஆசைகள் என்று பலர் பரிகசிக்கவும் கூடும். வம்பை விலைக்கு வாங்குகிற மாதிரிதான் இதெல்லாம் என்று சிலர் எச்சரிக்கவும் செய்யலாம்.

சிவகுரு மற்றவர்கள் ஆபிப்பிராயம் பற்றி கவலைப் படுகிறவர் இல்லை. "சொல்லுகிறவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்; அப்படிப் பேசுவது அவர்களுக்கு சந்தோஷம் அளிக்கிறது. நான் என் இஷ்டம்போல் நினைப்புகள் வளர்ப்பதும், அவற்றில் சிலவற்றையாவது செயலாக்க ஆசைப்படு: வதும் எனக்கு சந்தோஷம் தருகிறது” என்று அவர். மனம் பேசிக்கொள்ளும்.

அவ்வாறு அவர் என்னதான் விந்தை நினைப்புகளையும், விசித்திரக் கனவுகளையும் வளர்த்து வந்தார் என்று கேட்டாலோ...

சிவகுரு ரயிலில் பயணம் போகிறார். சன்னல் வழியாக வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக்

தோ-10