பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 170


பேசின்னுசாமி குறிப்பிட்ட தெருவை அடைந்ததும் சுயம்புலிங்கம் சைக்கிளை விட்டிறங்கி நின்று நெடுகிலும் தமது பார்வையை எறிந்தார். ஓர் இடத்தில் நாலைந்துபேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

சுயம்பு விறைப்பாக நின்று, “ஏய், இங்கே என்ன கும்பல்? நீங்கதான் கலாட்டா பண்ற ஆளுகளா? தலையைச் சீவிடுவேன். ஆளைக் குளோஸ் பண்ணிடுவேன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டுதா? எல்லோரையும் ஸ்டேஷனுக்குத் தள்ளிட்டுப் போயி பாடம் கத்துக் கொடுக்கிறேன். நான் யாரு தெரியுமில்லே? உங்களை யெல்லாம் தொலைச்சுப் போடுவேன், தொலைச்சு!” என்று இரைந்தார்.

அவ்வளவுதான்; அங்குமிங்கும் உட்கார்ந்திருந்த வர்களும், ஒய்ந்து கிடந்தவர்களும் ஒவ்வொருவராக வந்து ஒதுங்கி நின்றார்கள். பீடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன், அதை அவசரம் அவசரமாக மண்ணில் போட்டுக் கால் பெருவிரலால் தேய்த்து நசுக்கினான், ஒன்றிரண்டு பேர் தோளில் கிடந்த துண்டை இறக்கி, கையில் தொங்கவிட்டு மரியாதை காட்டினார்கள்.

“அப்படி ஒண்னும் இல்லிங்களே எசமான்!” என்ற சொற்களை மென்று மென்று வெளிப்படுத்தினான் ஒருவன்.

“பின்னே பொன்னுச்சாமி வந்து ரிப்போர்ட் கொடுத்தானே? அது விளையாட்டா? ஒரு மனுசன் உசிரு என்ன கிள்ளுக் கீரையா? அவன் கத்திரிக்காயா இல்லே கோழிக் குஞ்சா? நீங்க நினைச்ச உடனே அரிந்து தள்ளவும், நறுக்கிக் கொல்லவும்?” என்று கத்தினார் சுயம்பு.

“எசமானுக்கு யாரோ தப்பாத் தகவல் கொடுத்திருக்காங்க!”