பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுகுறும்பு



"உமக்குப் பார்க்கும் கண்களும் ரசிக்கும் மனமும் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்" என்றது சிதம்பரத்தின் மனக்குறளி.

"பார்வை என்பது எல்லோருக்கும் இயல்பாக அமைந்த ஒரு திறன். ஆனால், பார்ப்பது என்பது தனிப்பட்ட கலை!" என்றும் அது குறிப்பிட்டது.

சிதம்பரம் அப்போது ஒடும் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் தூங்காமல் உட்கார்ந்திருந்தான். கூட்டம் நிறைந்த சூழ்நிலைதான்.

அவன் வண்டி வண்டியாகத் தேடி, ஒரு பெட்டியைத் தேர்ந்து, உள்ளே புகுந்து, இடம் பிடித்து, ஜன்னல் ஒரத்து மூலையில் சுகமாகச் சாய்ந்திருந்த போது, அந்தச் சூழல் வறண்டதாகத்தான் இருந்தது. பிறகு ஒரு பிரயாணி, தன் மனைவி, குழந்தை, பெட்டி கள் சகிதம் வந்து சேர்ந்தான்.

"இவனுடைய சகோதரியோ என்று எண்ணத் துண்டும் முகத்தோற்றம் இவளுக்கு இருக்கிறது" என்று சிதம்பரம் நினைத்தான். "இவர்கள் இங்கே வந்து சேர்ந்ததனால் அதிகமான இடைஞ்சல் எதுவும் ஏற்பட்டு விடவில்லை!" என்று விமர்சித்தது அவன் மனம்.

பட்டாடையும் பளபளப்பும் பெற்றிருந்த அந்த இளம்பெண் வறண்ட இடத்துக்குக் குளுமையும்,