பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'புதுக்கவிதை´ வடிவம் தமிழிலக்கியக் களத்தில் முகிழ்ப்பதற்கு முந்தைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டக் கூடிய தன்னம்பிக்கையை, விடாமுயற்சியை, வெற்றியின் சூத்திரங்களை மரபுப்பா - வடிவங்களில் வடித்துள்ளார் `எழுச்சிக்கவிஞர்´ வயலுார் சண்முகம்.

    வெளிச்சம் ததும்பும் வெற்றிகளை அடையத் துடிக்கும் இளையோருக்கு, இக்கவிதைகள் ஞானக் களஞ்சியமாகத் திகழ்கின்றன.
     
 தமிழ்க்கவிதையுலகுக்கு `அணி´ சேர்க்கும்

இத்தொகுப்பினை வெளியிடுவதில் 'அணி' பெருமிதம் கொள்கிறது.

              அன்புடன்                     
             
           ஆர்.பரிமளா