பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

நடந்து கொண்டே இரு!

துன்பம் வரும்போது தூர விலகாமல்
இன்பம் அதுவென்றே எண்ணிடுவீர் தாவிடுவீர், என்றழைத்தே வீரஇளைஞர் திருப்படையை
ஒன்றி எழுந்தே உலகாளக் கூவுகிறான்.

கள்மயக்கம்! கன்னிதரும் காமச்சுக மயக்கம்! உள்மயக்கம் காட்டும் ஒவ்வா. மயக்கமெலாம் பின்னடையச் செய்யும் பெருமயக்கம் உங்களுக்கே
என்ன இருந்தாலும் இப்போதே போட்டுவிட்டுச்

சமதர்ம சமுதாயத்தின் சொர்க்கத்தை ஆக்கிடவே சாதிமதப் பாசாங்கை ஒட விரட்டிடவே இன்றே எழுந்திடுவீர். எக்காலம் ஊதிடுவீர்!
நன்றுவரும் புதுஉதயம் நமக்கென்றே முரசைறைவீர்!