பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17 நடந்து கொண்டே இரு!

      கப்பல்

காலம் என்னும் கடல்வழியைக் கடக்கும் கப்பல் வாழ்க்கையடா! சால அதனை உந்துகின்ற சாகஸக் காற்றே நம்முணர்வாம்!

நல்லது கெட்டது கண்டறியும் ஞால அனுபவப் பகுத்தறிவே வல்ல வாழ்வுக் கப்பலதை வகையாய் ஒட்டும் மாலுமியாம்!

உந்தும் காற்றே ஆற்றாலோஒட்டும் மாலுமியை இழந்தாலோவந்த இடமும் செல்லிடமும் மயங்கிக் கப்பலே மூழ்கிவிடும்!