பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29 நடந்து கொண்டே இரு கண்டார் விரும்பக் கவர்ச்சித் திறம்காட்டு! பெண்டோ ரிடத்தே பிணங்காதே! - பண்டேபோல் கூன்றோர் குற்றம் களையாதே! சீறாதே! இன்றைக்கு மட்டும் இது

அன்பே ததும்ப அருவே வழிந்தொழுக இன்சொல்லால் யார்க்கும் இதம்தருவாய்! உன்னையே துன்றாப் பகைவனையும் சோதரனாய் ஏற்றிடுவாய்! இன்றைக்கு மட்டும் இது! நீளும் பெருவாழ்வின் நெட்டைப் புதிர்களுக்கே நாளொன்றில் தீர்வுவரும் நண்ணாதே வேளைவரும் என்று பொறுத்திருப்பாய் இன்னல் கருதாமல்! இன்றைக்கு மட்டும் இது!

இன்றைக்கு மட்டுமென இப்படியோர் நாளதனில் நன்றுள்ள பாதி நகர்ந்திடுமேல்-என்றைக்கும் , இன்றைக்கு மட்டும் இதுவாகும். ஆமாமாம்! இன்றைக்கு மட்டும் இது! *