பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே. சண்முகம்

68



'பிடித்துவைத்துப்' பூச்சொரிந்து 'பிள்ளையாராய்ப்'
பின்வருவோன் ஒருவனையே ஆக்கி வைத்தும்
பிடிக்காத காரணத்தால் 'வழித்' தெறிந்தே
'பீடைஇது" வெறுஞ்சாணி உருண்டை;' என்றே
தடித்தனமாய்த் தந்திரமாய் விலக்கி வைத்துச்
சாடுவதும் தலைமையதன் பண்பே அல்ல!
இடித்துரைத்தால் செவிகொடுத்து நியாயம் ஆய்ந்து
இளங்குரலை வாழ்த்துவதே தலைமை ஆகும்.