பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை 'இன்றைய விதை நாளைய செடி! நாளைய செடிகளின் கூட்டணியே வருங்கால வனம்! என்பது இயற்கைக்குப் பொருந்தும். இளமைக்கும் பொருந்தும்.

     ஒவ்வொரு காலகட்டத்திலும் வளமையான இளமை கொண்ட இளைஞர் திருக்கூட்டமே தேசங்களின் எதிர்காலங்களைத் தீர்மானிக்கிறது.
      இளைஞர்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குள் புதைந் திருக்கும் ஆற்றலைப் புரிய வைத்து, சமூகக் கட்டடத்தின் தூண்களாக அவர்களை உருவாக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் , பெரியோருக்கும் உண்டு.
    இச்சமூகக் கடமை கலை இலக்கியவாதிகளுக்கும் கணிசமாக உண்டு.