பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

விந்தன்


"சிலோன் டூருக்குப் போற வரையிலே பொறுமையாயிருந்தார். அங்கே போனதும் நாலு பேரைக் கூட சேர்த்துக்கிட்டு ஸ்டிரைக், அது இதுன்னு ஆரம்பிச்சி, கடைசியிலே கம்பெனியை விட்டே விலகிவிட்டார்!”

“அய்யர் அவரைச் சும்மா விட்டாரா ?”

“அது சிலோன் ஆச்சே, அங்கே அவரால் என்.எஸ்.கே. யை என்ன செய்ய முடியும்?”

“அடிப்பியா, உங்கப்பன் மவனே, சிங்கண்டான்னு மீசையை முறுக்கிக் காட்டிவிட்டார் போலிருக்கிறது!"