பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

விந்தன்



“குற்றவாளிகளைக் கட்டி வைச்சி அடிக்க!”

“சட்டப்படி ‘செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்னாலே குற்றம் என்பார்களே ?”

“அந்தச் சட்டம் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இல்லையோ, என்னவோ!”

“அப்புறம் ?”

“அவர் கொஞ்சம் சங்கீதப்பைத்தியமுங்கூட. ஒஞ்ச நேரத்திலே சி.எஸ்.ஜெயராமனைக் கூப்பிட்டுப் பாடச் சொல்லிக் கேட்பார்....”

“அப்படியா ? அவர் உங்கள் ஆள் என்று சொல்லுங்கள்!”

“ஒரேயடியா அப்படிச் சொல்லிவிடவும் முடியாது. அன்னிக்கு என்னவோ ஹெட் கான்ஸ்டபிள் செய்தது சரியில்லேன்னு அவர் மனசிலே பட்டிருக்கு என்னையும். அவரையும் கண்டிச்சி விட்டுட்டார்!”

“செட்டியார் ?”

“விடல்லே: அன்னிக்கே எனக்கு ஒரு கால் கட்டைப் போட்டால்தான் ஆச்சுன்னு கடலூர் வஸ்தாது நாயுடுவை விட்டு எனக்குப் பொண் பார்க்கச் சொல்லிவிட்டார்.”

“சரிதான், வஸ்தாதுக்கு வஸ்தாதே பெண் பார்த்தார் போலிருக்கிறது!”