பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

விந்தன்


13. பொள்ளாச்சி ஞானம்

“டைரக்டா் பிரகாஷின் புண்ணியத்தால் கால் ஒடிந்து நான் ஒன்றரை வருஷம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அதைப் பற்றி ‘ஹிந்து’ பேப்பர்கூட அப்போ கண்டிச்சி எழுதியிருந்தது. அதுக்கப்புறம் நானும் பிரகாஷைப் பார்க்கல்லே, பிரகாஷூம் என்னைப் பார்க்கல்லே...”

“மறுபடியும் நாடகக் கம்பெனிக்கு வந்துவிட்டீர்களா ?

“இல்லே, சினிமா எப்போ வந்ததோ அப்பொவே பல நாடகக் கம்பெனிங்க கலைஞ்சி போச்சு. சினிமாவிலே ‘சான்ஸ்’ கெடைச்ச நடிகருங்க சினிமாவிலே நடிச்சாங்க, கெடைக்காதவங்க அங்கங்கே ‘ஸ்பெஷல் நாடகம் போட்டுக்கிட்டிருந்தாங்க...”

“நவாப் ராஜமாணிக்கம், டி.கே. எஸ். பிரதர்ஸ் போன்ற கம்பெனிகள்...”

“தொடர்ந்து நடந்துக்கிட்டுத்தான் இருந்தன. அவங்களைக் கண்டா எனக்கு அலர்ஜி: என்னைக் கண்டா அவங்களுக்கு அலர்ஜி!”

“அப்புறம்

“நானே படாதிபதியானேன்!”

“அதுக்குள்ளேயா?”

“ஏன், ஆகக் கூடாதா?”

“ஆகலாம்; பணம்... ?"