பக்கம்:நந்திவர்மன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

முல்லை : பச்சை பைரவி பூசைக்கு கள்ளு வேணு மாம்! என்னை வாங்கிக் கொடுக்கச் சொல்லி கெஞ்சுருரு: நல்ல பணம் நிதான் வாங்கிக் கொடேன் !

பச்சை : ஆமா, காளி பூசைக்கு கள்ளு எதுக்கு :

முல்லை : நீ ஒண்ணு கள்ளு மாத்திரமா! வெள் ளாடும், சேவக் கோழியும் வேணுங்குதே!

பச்சை : ஆங் சுவாமி நெசந்தானுங்களா? இதுக்குப் பேருதான் சைவமுங்களா? தன்னுயிரைக் கொடுத்தும் மன்னுயிரைக் காப்பதல்லவா சைவம்னு சொல்லுவாங்க.

சக்தி : ஜெய்காளி ஜெய் ஈஸ்வரன் 1 பக்தா ! தெளிவில்லாத நெஞ்சம் உயிரைக் கொல்லாதவரும், புலால் உண்ணுதவருமான ஆதிசைவரைப்பற்றி என் னிடம் பேசாதே! அவர்கள் பேடிகள்! நெஞ்சுரமற்றவர் கள் சுடலையிலே விளையாடி மண்டையோட்டிலே மது வருந்தும் மகேஸ்வரன் பேரருளை ஒருக்காலும் அவர் களால் பெற முடியாது ! காபாலிக சைவத்தின் கடுமை யான பக்திக்குத்தான் முக்தியுண்டு மோட்சமுண்டு !

பச்சை: ஆஃகா! தெளிஞ்சி போச்சு எனக்கு ! இந்த சைவந்தான் சரியான சைவம் !

சக்தி : பக்தா பூசைக்குரிய மதுபானம் கொண்டு ! T,

பச்சை : பணத்தை மொதல்லே கொடுக்கணும் ! அப்புறம் எங்க ரெண்டு பேரையும் கோயில்லே, சோடி யிலே கண்ட வெரட்டாமே இருக்கணும்! இதுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/101&oldid=671859" இலிருந்து மீள்விக்கப்பட்டது