பக்கம்:நந்திவர்மன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$47

விக்ர: சபாஷ்: அற்புதமானயோசனே!ஆமாம் வித்யாவதி ஏன் போகிருள்?

சந்திர: வேலையிருக்கும்.

பச்சை (வாயை மூடியபடியே) நான் திறக் கட்டுமா?

விக்ர: திறப்பா திற! நீ மூடுவதும் திறப்பதும் மட்டுமென்ன? சாவதும் வாழ்வதும் கூட ஒன்று தானே!

பச்சை: சேணுதிபதியாரே! அவ்வளவு கேவ லமா கெனச் சுடாதிங்க என்னே! நான் மனசு வச்சா இந்த உசிரை சூப்பி எறியற மாங்கோட்டையா மதிச்சுடுவேன்:

விகர: அடடே அவ்வளவு பெரிய வீரனு:

பச்சை: இங்தாங்க; கத்திசண்டையிலே நீங்க ஆசகாய சூரன் தானே? பந்தயம் கட்றேன்; என் மாதிரி கத்திச்சண்டை போடமுடியுமா?

விக்ர: பச்சை ஏன் அலட்டிக் கொள்கிருப்? பந்தயம் என்ன?

பச்சை: தோ:மகாராஜாகுடுத்த இந்த முதது

மாலை.நான் தோத்தேன்; இதையே கொடுத்திட றேன். நீங்க தோத்தா:

விக்ர: நான் தோற்றால்...(தடுமாறி)அதற்குச் சமமாக என்னிடம்......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/149&oldid=671911" இலிருந்து மீள்விக்கப்பட்டது