பக்கம்:நந்திவர்மன்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

சங்கா: ஐய.கோ களம் பல கண்ட மாவீரர், மூவேந்தராலும் வெல்லமுடியாத ஈடற்ற தமிழ் மறவர், என் அருமை மணுளர், துரோகத்தின் தீயிலே வெக்து சாம்பலாகிவிட்டாரே! காப்பதற்கு ஒடிவங் த எங்களைப் பார்ப்பதற்கும் இல்லாமல் மறைந்து விட்டாரே! கலம்பக அரங்கேற்றம் காஞ் சிக்கோர் களங்கமாக முடிந்து விட்டதே! அந்தோ, வாழவைக்கும் வண்ணப் பசுங் தமிழை மாளவைக் கும் சதிக்கருவியாக்கிய இந்தச் சண்டாளத்தை மறந்திடுமோ உலகம்!மறந்திடுவாரோ செந்தமிழ்க் காவலர்கள்?

பெருங்: மன்னவர், எவரும் எட்ட முடியாத பெருநிலைபெற்றுவிட்டார்:மகாராணிஉயிர்ப்பற்றி னும் மொழிப்பற்றினேப் பெரிதாக்கினர்! தமிழுக் குத் தன் வாழ்வினையே அர்ப்பணித்து, இலக்கியத் திலே ஒரு பொன்னேடு சேர்த்துவிட்டார்! தமிழக வரலாற்றிலே எவரும் பெறுதர்க்கரிய தனியிடம் பெற்று விட்டார் தார்வேந்தர்!

சங்: புகழிடம் பெற்று மறைந்தார் மன்னர்; இனி எங்கள் நிலை? எங்கள் வாழ்வுக்குப் பாதுகாப் புத் தருபவர் யார்?

பெரு: இந்த நாடு: இந்த நாட்டின் மக்கள் மன்னவரின் மைந்தன் சிங்கக்குட்டி கிருபதுங்கனே சிரங் தாழ்த்திவரவேற்கின்றனர், சிம்மாசனத்துக்கு! மனிதகுல மாணிக்கத்தின் மங்காத பரம்பரை மணிமுடி புனேந்திட வேண்டும் இளவரசரின் செங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/199&oldid=671966" இலிருந்து மீள்விக்கப்பட்டது