பக்கம்:நந்திவர்மன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மைத் : அசந்தர்ப்பம் ஏதுமில்லையென்று நினைக் கிறேன். அப்படி இருந்தால்... மன்னிக்க வேண்டும்.

சந்தி:- (ஒவியத்தை வாங்கிப் பார்த்து) முடியாது. மன்னிக்கும்படியான காரியத்தையா நீர் செய்திருக்கிறீர்? வித்தியாவதி பாத்தாயா ஒவியத்தை?

வித்தி - (பார்த்து) அற்புதமான சித்திரம் பாடு கின்ற நீங்கள், அபிநயம் பிடித்து ஆடுகின்ற நான்! அடடா !

மைத் - ஆமாம், தேவலோகத்து சித்திரசேனனும் ஊர்வசியும் போல ! -

சக்தி : அன்பின் மிகுதியால் நம்மைச் சேர்த்து வைத்த மைத்ரேயர் : கலையின் திறத்தால் நம்மை அமரக் காதலராக்கி விட்டார் வித்தியாவதி எப்படி இவரை மன்னிப்பது? என் கையிலே ஆட்சி இருந்தால், பொற் காசுகளை வள்ளம் வள்ளமாக இ வ. ர து தலையிலே கொட்டி, குவியலிலே திணறடிப்பேன் இவரை !

மைத் :- அப்படியானுல், மன்னன் நந்திவர்மனின் பாராட்டினைப் பெறப்போவதில்லையா ஒவியம்?

சந்தி :- ஏன் பெருது ? செங்கரும்பை விரும்பாத யானையுண்டோ?

மைத் :- நாம் சந்திக்கும் நேரத்தில், யானைக்கு மதம் பிடித்தால்...?

சக்தி : நான் அடக்குகிறேன், ைமத்ரே யரே ! மன்னனின் பாராட்டைப் பெற வேண்டும் இந்த மகத் தான சித்திரம், அவ்வளவுதானே? அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/42&oldid=671993" இலிருந்து மீள்விக்கப்பட்டது