பக்கம்:நந்திவர்மன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

சங்கா : பக்தி தன்னலம் : அன்பு பொதுநலம்! எவ்வாறெனில், ஆண்டவனை நாடி நிற்பது பக்தி : அனைத்துயிரையும் வாழ வைப்பது அன்பு! எனவே, அன்புதான் சிறந்தது.

சக்தி : அப்படியானுல், கலைகள் யாவும் தெய்வீக சானித்தியம் பெற்றவை யென்பது பொய்தானே ?

சங்கா : தெய்வமே அன்பின் வடிவமாயிற்றே ! அன்பே கடவுள் அன்பே வாழ்வு; அன்பே உலகம் ; அன்பே அறமாகும் “அன்பு இலதன வெயில்.போலக் காயுமே என்பு இலதன அறம்’ என்பது குறள் நீதி.

சந்தி : பக்தியை இழிவு படுத்தும் தப்பான வாதம் இதை ஒப்ப முடியாது!

சங்கா : உண்மையை ஒப்புவது நல்வாதம் மறுப் பது விடிவாதம் !

கிருப ; (பந்தைக்காட்டி) சித்தப்பா ! வரும்போது அங்காடியில் எனக்கு பந்து வாங்கிக் கொடுத்தீர்களே ! ஏன்?

சக்தி - இது என்னடா கேள்வி ? விளையாடு வதற்கு.

கிருப :- (தூக்கிப் போட்டுப் பிடித்து) நான் விளை வாடுவதை நீங்கள் விரும்பக் காரணம் ?

சந்தி : அதுவா? உன் மேலிருக்கும் அன்பு.

கிருப :- ஊம் !..... அதுதான் சித்தப்பா முக்கியம்! பற்று, பாசம், பக்தி எல்லாவற்றிற்கும் அடிப்படையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/54&oldid=672006" இலிருந்து மீள்விக்கப்பட்டது