பக்கம்:நந்திவர்மன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1?

இடம் :- முல்லையின் வீடு

காலம் : மாலை

பச்சையும், அவளும் இருக்கின்

ளு றனர் ..]

முல்லை :- எங்கே ; நான் சொல்ற மாதிரி மட மடன்னு சொல்லு பார்க்கலாம் !

பச்சை :- முல்லை ! இதிலே நான் கெலிச்சேன் என்கையாலே நாலு அரை நீ வாங்கிக்கனும் !

முல்லை :- சரி. அடடா நரி கரடேறுதடா ஒன்பது நரியினில் ஒரு நரி சினை நரியடா சினை நரி முதுகினில் ஒரு பிடி நரை மயிரடா நரை மயிர் நுனியினில் புது மலர் மணமடா- புதுமலம் மணமதில் குமரியின் நினை


வடா !

பச்சை :- (நிதானமாக) அடடா, நரி கரடேறு தடா, ஒன்பது நரியினில் ஒரு நரி ..... சினை, நரியடா’ சினை நரி முதுகினிலே .. வந்து... வந்து...

முல்லை :- (வெடுப்பாக) பனங்காயி சே! சே! இப் படி ஆமை வேகத்திலே ஆருந்தான் சொல்வாங்க! நீ

என்ன !

பச்சை :- முல்லை வேகம் பெரிசா பாவ ம் பெரிசா : நான் புலவர் மகன். பாவத்தோட பக்குவமா, புரியராப்லதாஞ் சொல்வேன். அடடா, தடடா, தடா தடா வெல்லாம் ஒதவாது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/73&oldid=672027" இலிருந்து மீள்விக்கப்பட்டது