86
சக்தி ;- (அஞ்சி) ஆ! என்ன ?..... எ ன் ன?..... எனக்கொன்றுமே தெரியாதே! ஏதோ எங்கனமோ
நடத்திருக்கிறது!
சீலா : கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தான்; குள் என் ஒழிந்துவிட்டான் ! கள்ளன் கலங்குகின்றான் அகப் பட்டுக்கொண்டு !
சந்: அமைச்சரே! எரியும் தீயில் எண்ணை வார்க் காதீர்! எனக்கும் பேசத்தெரியும் !
சங் : அது எனக்கு நன்றாகத் தெரியுமே ! ஆணுல், விவாதம் புரிய நேரமில்லை மைத்துனரே ! மைத்ரேயன் சதிக்கு உம்மிடமே மரணதண்டனை பெற்றுவிட்டான். உமது சதிக்கு நான் சிறைத்தண்டனை அளிக்கிறேன் உமக்கு. மன்னவர் வந்தபிறகு செய்வதைச் செய்யட்டும்! யாரங்கே?
வீரர் இருவர் : (வந்து வணங்கி) மகாராணி !
சங்கா : இவரைச் சிறையிலே வையுங்கள் !
வீரர்கள் : உத்திரவு.
|தலைகவிழ்ந்து நிற்கும் சந்திரவர்மனை இழுத்துச் செல்கின்றனர்)
சங் அமைச்சரே ! இந்த இரு சதி ஒலைகளோடு..., சீலா : இப்பொழுதே மன்னருக்குச் செய்தியனுப்பு
கிறேன் மகாராணி !
(ஒலையைத் தர அமைச்சர் வாங்குகிறார்)