பக்கம்:நனவோட்டங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 103 "இப்பொழுதும் பல பேர் அதற்காகச் சிறை சென்று கொண்டிருக்கிறார்கள்" என்றார். "எனக்கு விளங்கவில்லை." "அவர்களைக் குற்றவாளிகள் என்று உள்ளே தள்ளுவதால் உங்களுக்குத் தெரிவது இல்லை. இங்கே இந்தக் குப்பத்திலே இருந்து பல பேர் திருட்டுக் குற்றம் செய்கிறார்கள். இது ஆரம்ப நிலை; மேல் நிலையில் கள்ளக் கடத்தல் செய்து குற்றம் செய்கிறார்கள். அவர்களை மிசாவில் உள்ளே தள்ளினார்கள். இப்பொழுது தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்யும் பொழுது அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்படு கிறார்கள். மாணவர்களும் சில சமயம் அடிதடிகளுக்கு ஆளாகிறார்கள். இது மூன்றாவது நிலை, இந்த ஆரம்ப நிலைகள் சமுதாயம் ஒப்புக் கொள்ளாத கிளர்ச்சிகள்; மூன்றாவது தான் சமூகம் ஒப்புக் கொள்கிறது; அதைக் கவுரவிக்கவும் செய்கிறது." "இவற்றின் விளைவு?" "நான் சொன்ன மூன்றாவது அடிப்படை மாற்றத்துக்கு அடிகோலுகிறது. இந்த அடிப்படை மாற்றங்கள் நடப்பதற்கு நாட்டில் ஆரம்ப முயற்சிகள் நடக்கின்றன என்பது அர்த்தம்" என்றார். அந்த ஒவியரின் மன்றத்தில் பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பல்கலைக் கழகங்களில் மாலை நேரச் சொற்பொழிவுகள் சில நடத்துவார்கள். அவற்றைக் கேட்பது போல் இருந்தது. அதற்குமேல் அங்குப் பேசுவது எனக்குப் பிடிக்க வில்லை. ஒவ்வொன்றுக்கும் இப்படி ஏதாவது விளக்கம் சொல்வார் என்பது தெரிந்தது. விளக்கம் நன்றாக இருந்தது, என் மனம் அதில் அதிகமாக ஈடுபடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/105&oldid=772796" இலிருந்து மீள்விக்கப்பட்டது