பக்கம்:நனவோட்டங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 129 "கடைசியில் அது கட்டுக்குள் அகப்பட்டுத்தானே ஆக வேண்டும்" என்று சமாதானமும் சொன்னேன். இந்தச் சின்ன வயதில் அவளுக்கு இவ்வளவு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது கண்டு வியந்தேன். 'உன் வயது என்ன ? இருபத்தாறு என்று நினைக்கிறேன்". - "பல முறை இதே கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள். என் வயது இருபத்திரண்டு என்று சொல்லி இருக்கிறேன். மறந்து விடுகிறீர்கள். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு. எனக்கு உங்களைப் பொறுத்த வரையில் என்றும் இருபத்தாறு” என்றாள். "அதற்கு என் வயதுதான் காரணம். என்னை வைத்து உன்னைப் பார்க்கிறேன்" என்றேன். அவள் கண்களில் நீர் நிறைந்தன. அந்த வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை அவள் கண்ணிர் எடுத்துக் காட்டியது. "ஏன் அழுகிறாய்?" "அழ வேண்டும் போல் இருந்தது" "அப்படிக் கூடவா தோன்றும்?" இப்படியெல்லாம் அவள் பேசி இருக்கிறாள். அந்த நினைவுகள் அந்த ஆல்பத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தன. "இப்பொழுது இந்தப் படங்களை மறைக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு அமைதி கிடைக்கும்" என்றாள். மேலும் சொன்னாள் "அம்மா இதை ஒப்புக் கொள்ள வில்லை. வீட்டுக்கே இந்தப் படங்கள் தாம் களை, இவற்றை நீக்கிவிட்டால் குட்டிச்சுவர் தான் மிஞ்சும் என்கிறாள். அவர் களுக்கு என்ன தெரியும். என் உணர்ச்சிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/131&oldid=772845" இலிருந்து மீள்விக்கப்பட்டது