பக்கம்:நனவோட்டங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ல் ரா. சீனிவாசன் திசைகாட்டும் பலகை இருந்தது. கிழக்கு மேற்கு தெற்கு வடக்காக அம்புக் குறிகள் போடப்பட்டிருந்தன. அவள் அங்கே உட்கார்ந்தாள். நானும் அங்கேதான் உட்கார்ந் திருந்தேன். இருவரும் ஒன்றாகத்தான் வந்தோம். அவளுக்கும் திக்குத் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. எங்கே போவது என்று தெரியாமல் இருக்கும் பொழுது யாரிடம் வழி கேட்டது. இரண்டு பேரும் மெளனம் சாதித்தோம். மறுபடியும் நான் அதே டீ கடைக்குப் போகிறேன். அவளும் என்னோடு வருகிறாள். இரண்டு சிங்கிள் டீ கேட்டேன். அவனுக்கு ஏன் என்று தெரியவில்லை. அவளை அவன் கவனிக்கவில்லை. அவளோடுவந்த பிறகு, என் அந்தஸ்து உயர்ந்து இருந்தது. அவளோடு நான் டீ குடிக்க வருவேன் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. அவன் எங்களை ஒரு மாதிரியாகக் கவனித்தான். இப்படி டீ குடிக்க வரும் தம்பதிகள் பலரை அவன் சந்தித்திருக்கிறான். நான் குடித்தேன்; தவறு மெல்லப் பருகினேன்; அவள் குடித்தாள். மறுபடியும் கூட்டு ரோடு எங்களை விட்டு மறைந்தது. இது வெறும் உருவகம். இப்படி என் நினைவுகள் ஒடின. எதிர்ப்பு வந்தால்தான் மனம் தெளிவு பெறுகிறது. செயல் பிறக்கிறது என்பதை அறிய முடிந்தது. "அப்பா! அவருக்கு விவாகரத்துக் கொடுக்கத் தீர்மானித்து விட்டேன்." அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னால் பல வழக்குகள் கொண்டு சென்றிருக்கிறார். பல கேஸ்கள் தள்ளுபடியாகி இருக்கின்றன. அவற்றை எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். - அவர் நெஞ்சில் சலனம் ஏற்பட்டது; அதோடு சஞ்சலமும் கலந்துவிட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/180&oldid=772899" இலிருந்து மீள்விக்கப்பட்டது