40 ரா. சீனிவாசன் என்று கேட்டுத் தொலைவார்கள். அவள் கண்களில் ஒரு ஏக்கம் வெளிப்படும். உள்ளூர ஒரு மகிழ்ச்சி தளும்பும். வயதானவர்களுக்கு விரக்தியே ஏற்படுவதில்லை என்பதை அம்மாவிடம் காண முடிந்தது. அவர்கள் புதிய ஆசைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்ந்தது போதும் என்று நினைப்பவர்களைப் பார்க்கவே முடிவதில்லை. வாழ்ந்து கொண்டே இருக்க விரும்பு கிறார்கள். மறுபடியும் அவள் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்குக் கவுரவமான பெயர் பாட்டி அந்த ஆசை அவளை வருங்கால மருமகளைப் பற்றிக் கனவு காண வைத்தது. எனக்கு ஏற்றவளாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். நிறையப் பணம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். சொத்து இருக்கவேண்டும்; யாரோ டாவது பேசும் பொழுது இதைத்தான் கூர்ந்து கவனிக்கிறேன். எத்தனை சவரன் போட்டார்கள். எவ்வளவு சொத்துவரும். ஐந்து லட்சமாமே. ஒரு பெண்ணாமே யாரோ எவரோ அவர்களைப் பற்றிப் பேசும் பொழுது இந்த லட்சம்தான் அம்மாவின் பேச்சில் அடிபடும். அவள் லட்சியத்தை என்னால் உணர முடிகிறது. "பெண் அழகாக இருக்கவேண்டாமா?" என்று கேட்பேன். "அதுவும் அவசியம் தான்." "இப்படி எல்லோரும் அழகான பெண்களையே நாடினால் மற்றவர்கள் கதி?” என்று நீட்டிப் பேசுவாள். அவள் சோஷியலிசப் பாதை எனக்கு வியப்பைத் தருகிறது. எல்லோரும் வாழவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் எனக்கு விளங்கியது. -
பக்கம்:நனவோட்டங்கள்.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை