இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சம உரிமை, சம அந்தஸ்து சம உடைமை இம்மூன்றும் அடங் கியதுதான் சமதர்மம். இதை அடையச் சீர்திருத்தம், சீரமைப்பு, அடியோடு மாற்றம் இம்மூன்று நிலைகளும் தேவைப்படுகின்றன. சமதர்மப் பாதையை நோக்கிச் சமுதாயம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை ஓர் ஓவியமாக வடித்துத் தருவதே இந்நாவல்.