பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நபிகள் நாயகம்

அவைத்தலைவர் அவர்களே! மெளல்விமார்களே! தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் இந்த மாலைப் பொழுதில் என்னுடைய தாழ்மையான வணக்கம்.

கும்பகோணத்தில் கூடியுள்ள பெருமக்களாகிய உங்கள் முன்பு, இன்றைய தினம் அகில இந்திய மீலாத் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்கு பெறுகின்ற பேறு எனக்கும் கிடைத்தமை பற்றி அதிக மகிழ்ச்சி அடைகிறேன். நாயகம் அவர்களுடைய பிறந்த நாள் விழா நடப்பது குறித்து 45 ஆண்டுகளுக்கு முன்னே மாறுபட்ட கருத்தும் தோன்றியதுண்டு. மெளல்விமார்கள் அன்று அதை மறுத்தார்கள் பண்டிகைகளைப் போல இவ்விழாவைக் கொண்டாடக் கூடாது என்று.

முதன் முதலாக இந்த விழாவைக் கொண்டாடியது திருச்சிராப்பள்ளியில், 45 ஆண்டுகளுக்கு முன்னே. திருச்சிராப்பள்ளியில் பெரிய கடை வீதியில் பேகம் பள்ளி வாசலில் முதன் முதலாகக் கொண்டாடப்பெற்ற விழாவில், பங்கு பெற்ற நான், இந்த விழாவிலும் பங்கு