பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169


  1. மறு வருடம் முஸ்லிம்கள், மக்காவுக்குள் வந்து மூன்று நாட்கள் மட்டும் தங்கிப் போகலாம்.
  2. முஸ்லிம்கள் மக்காவுக்குள் வரும் போது, ஆயுதங்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. வாளை மட்டும் கொண்டு வரலாம். ஆனால், அதை உறையிலே போட்டிருக்க வேண்டும்.
  3. மக்காவில் ஏற்கனவே தங்கியிருந்த முஸ்லிம்களை, மதீனாவுக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது.
  4. மக்காவிலிருந்து யாரேனும் மதீனாவுக்குச் சென்றால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அவர்களை மக்காவுக்குத் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால், முஸ்லிம்களில் யாரேனும் மக்காவுக்கு வந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.
  5. அரபிக் கூட்டத்தார் தங்கள் விருப்பம் போல், இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சியினரிடமாவது உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.


127. உடன்படிக்கையால் ஏற்படும் நன்மை

குறைஷிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் நிபந்தனைகள் வெளித் தோற்றத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமற்றவனவாகத் தோன்றலாம்; ஆனால்,

பெருமானார் அவர்கள் எதற்காக இந்தச் சாதகமற்ற நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும்? என ஒரு கேள்வி எழலாம்.

பெருமானார் அவர்களின் அறிவு சான்ற அரசியல் இங்கே சிறப்பாகப் புலப்படுகிறது.

குறைஷிகளும் முஸ்லிம்களும் நடத்திய பல போர்களில் முஸ்லிம்களே தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கின்றனர்.

எதிரிகள் வந்து முஸ்லிம்களைத் தாக்கினால், இஸ்லாத்துக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய அவர்கள் அனைவரும் தயாராகவே இருந்தனர்.