189
பெருமானார் அவர்களுடன் சென்ற படைகளின் எண்ணிக்கை ஆயிரத்து அறுநூறு. அவற்றில் இருநூறு குதிரைப்படையும் மீதி காலாட் படையுமாயிருந்தன.
நடைபெற்ற சண்டைகளில் சிறிய கொடிகளையே கொண்டு போவது வழக்கம். இப்பொழுது மூன்று பெரிய கொடிகள் கொண்டு செல்லப்பட்டன.
படை புறப்பட்டுச் செல்லும் போது, பிரபலமான அரபுக் கவிஞர் ஒருவர் அரபுப் பாடலைப் பாடி படையினருக்கு உற்சாகமூட்டினார்.
“அல்லாஹ்வே! நீ வழி காட்டாவிட்டால், நாங்கள் ஒரு போதும் நேர் வழியை அடைந்திருக்க மாட்டோம்.
நோன்பு வைத்திருக்கவும் மாட்டோம்.
தருமம் செய்திருக்கவும் மாட்டோம்.
தொழுது இருக்க மாட்டோம்.
நாங்கள் உனக்கு அர்ப்பணமாகிறோம்.
எங்களுடைய வணக்கத்தில் ஏற்படும் குறைகளைப் பொறுத்து அருள்க.
எங்களுக்கு அமைதியைக் கொடுத்து அருள்க.
உதவிக்காக நாங்கள் அழைக்கப்பட்டால், நாங்கள் சேர்ந்து கொள்வோம்.
நியாயமற்ற காரியங்களுக்கு எங்களை யாரேனும் அழைத்தால் நாங்கள் அதை மறுப்போம்.
நாங்கள் சண்டை செய்வதாயிருந்தால், எங்களுடைய கால்கள் நிலைத்து நிற்குமாறு அருள் புரிவாயாக.
உன்னுடைய கருணையை விட்டு நாங்கள் விலகி இருக்க மாட்டோம்”
மேற்காணும் பாடலைப் பாடிக் கொண்டு, புறப்பட்டுச் சென்றுார்கள்.