24
இந்த உடன்படிக்கை நிறைவேறுவதற்குப் பெருமானார் அவர்களே முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளமை முதல் உண்மை, விசுவாசம், நம்பிக்கை முதலான உயரிய குணங்கள் பெருமானார் அவர்களிடம் அமைந்திருந்தன.
உண்மை பேசும் அவர்களுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது.
நம்பிக்கையிலும் அவ்வாறே உயர்வு பெற்றிருந்தார்கள்.
மக்காவிலுள்ள மக்கள், பெருமதிப்புடைய பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் பொருட்டுப் பெருமானார் அவர்களிடம் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
அப்பொறுப்பை பெருமானார் அவர்கள் மிக நாணயமாக நிறைவேற்றினார்கள்.
ஆகையால், “நம்பிக்கைக்கு உரியவர்” “உண்மை பேசுபவர்” என்னும் பொருள் படைத்த “அல்அமீன்” “அஸ்ஸாதிக்” என்னும் பட்டங்கள் பெருமானார் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
பெருமானார் அவர்களின் பகைவர்கள் நிந்தித்து எழுதிய கவிதைகளிலும் கூடப் பெருமானார் அவர்களை “அல்அமீன்” என்றே கூறியுள்ளனர்.
பெருமானார் அவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே பணிவும், கனிவும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.
நலிவுற்றவர்கள், ஏழைகள் ஆகியோருடைய துன்பங்களைக் கேட்பதற்கு அவர்களின் காதுகள் எப்பொழுதும் தயாராயிருக்கும். உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிவார்கள்.
தெருவில் நடந்து போகும் பொழுது, அவர்கள் அடக்கத்தோடு நடந்து செல்வார்கள்.