பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ο.4 நபிகள் நாயகம் வழியில் இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சிக் கோவையில் விடுப்பட்டதற்குக் காரணம் ஒன்று உள்ளது. அதுதான் சோழர்கள் அப்பொழுது தங்களது அரசியல் பகடைகளாக பாண்டியர்களை ஆட்டிப் படைத்ததும் அதன் விளைவாக அமைதியும் வளமையும் நிறைந்த பாண்டிய நாட்டில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவியதேயாகும். வருங்கால வரலாற்று ஆய்வாளர்கள் தமிழக வரலாற்றில் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து சரியான வரலாற்றினை மக்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

  • ్మ*