பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 129 ஆட்சிக்காலமான கி.பி. 1216-க்கும் செப்புப் பட்டைய காலமான கி.பி. 1742-க்கும் இடையே பெருத்த கால வேறுபாடு உள்ளது. மொத்தத்தில் சுல்த்தான் அவர்களது வாழ்க்கையை விவரிக்கும் இஸ்லாமிய வரலாற்று நூல்களுக்கும் இடையில் கால வேறுபாடு மிகுதியாக அமைந்து சுல்த்தான் அவர்களது சிறப்பான வாழ்க்கை யினைத் தெளிவாக அறிந்து கொள்ளுவதற்குத் தடையாக உள்ளன. அரபி மொழியில் உள்ள சுல்த்தான் அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்கள் வெளிப் படுத்தினால், ஷகீது அவர்களது வரலாறும் தமிழக வரலாறும் பயன்பெறும்.