பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காரணம் - மனிதர்கள் எல்லோரிடமும் திறமைகள் சக்திகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் செயல்படும் தன்மையில் தான் பற்றில்லை, பொறுப்பில்லை, ஈடுபாடுள்ள உழைப்பில்லை.

உழைப்பில் வாராத வெற்றிகளே இல்லை. இந்த உண்மையை உணர்ந்து பாராட்டி பின்பற்றுபவர்களே வாழ்க்கையில் உயர்கின்றார்கள். இலட்சிய வாழ்வு வாழ்கின்றார்கள்.

“மனிதன் என்பவன் உழைப்பாளியே. தினம் உழைக்க மறுக்கிறவன் மனிதனல்ல” என்கிறார் மேனாட்டு அறிஞர் ஒருவர்.

ஏனென்றால், உழைப்பு என்பது மனித வாழ்வுக்கு உணவு போன்றது. இன்பமே வேண்டும் என்ற மனப்பாங்கு ஒருவரது வாழ்க்கையை பாலைவனமாக மாற்றி விடுகிறது.

உழைப்புதான் வாழ்க்கை என்றால், அது எப்படி என்று இப்பொழுது உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதல்லவா. நியாயமான எதிர்பார்ப்புதான் இது.

எவன் ஒருவனுக்கு செய்வதற்கு வேலை இருக்கிறதோ அவனே பரிபூரண ஆசிகளைப் பெற்றிருப்பவன். எவன் தனக்குரிய வேலையைத் தெரிந்து கொள்ளாமல், ஏய்த்துத் திரிந்து சோம்பேறியாக வாழ்கிறானோ, அவன் ஒரு குட்டிச் சாத்தான் ஆவான்.