பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒலிம்பிக் பந்தயத்தின் லட்சியம். விரைக, உயர்க, வலிமை பெறுக என்றால், வாழ்வின் லட்சியமும் அப்படித் தானே அமைந்திருக்கிறது.

ஆகவே, நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் தான் வாழ்வின் வெற்றியை எட்டிப் பிடிக்கின்றார்கள்.

நம்மால் முடியாது என்று நினைப்பவர்கள், தனக்குள்ளே அமிழ்ந்து போய் விடுகின்றார்கள். தனக்குத்தானே உதவிக் கொள்ளாதவன் தரித்திரர்களாகத் தான் மாறி விடுகின்றார்கள்.

அதே சமயத்தில், உயர்ந்த சாதனையாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லோரும், தற்காலிகமாக எதிர்படும் தடைகளை எல்லாம், தடைகள் என்று தடுமாறாமல், தயங்கி நிற்காமல், தாண்டி வந்து விடுகின்றார்கள்.

இந்த சாமர்த்தியம் எப்படி அவர்களுக்கு வருகிறது?

அவர்கள் தங்கள் திறமைகளை சாமர்த்தியமாக கணக்கிட்டுக் கொள்கிறார்கள். அந்தத் திறமைகளை அறிவார்த்தமாக வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் உணர்வுகளை செயல்படுவதற்கு ஏற்ப திறப்படுத்திக் கொள்கிறார்கள். அத்துடன், தங்கள் முயற்சிகளைத் தொடங்குவதற்கேற்ப முன்னேற்பாடுகளில் முனைகின்றார்கள். அத்துடன், அதே கவனத்துடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இணைந்து கொள்கின்றார்கள்.